தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை - ஆற்காடு வீராசாமி
சட்டமன்ற தொகுதி:
அண்ணா நகர்
சட்டமன்ற பதவி:
ஆண்டு கட்சி
| ||||||||||||||
ஆற்காடு என். வீராசாமி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
வேலூர் மாவட்டம் குப்பாடிச்சத்தம் கிராமத்தில் 21 ஏப்ரல் 1937ஆம் ஆண்டு பிறந்தார். 1967, மற்றும் 1971ல் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 1989ல் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மூன்றுமுறை 1996, 2001, மற்றும் 2006ல் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1977 - 1983 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்பணியாற்றியுள்ளார். இவர் திமுகவின் பொருளாளராக பணியாற்றி தற்போது திமுகவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக