தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்: பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்
கோவை:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் விதமாக கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் பேசியது:
கோவை அரசியல் கட்சிகளை ஈர்க்கும் மாநகரமாக உள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்கள் சக்தியை காட்டும் விதமாக இந்நகரில் கூட்டத்தை நடத்தியுள்ளது. புதிய தலைமுறையை விஜயகாந்த் உருவாக்கி வருகிறார். ஏழை எளியவர்களுக்கு தானும் உதவி செய்து, கட்சியில் உள்ள இளைஞர்களையும் ஏழைகளுக்கு உதவ வழிகாட்டி வருகிறார். தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக தனித் தன்மையோடு தேமுதிக வளர்பிறையாக வளர்ந்து வருகிறது.
திமுகவுக்கு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அக்கட்சி தேர்தலில் தனித்து நிற்க தயாராக இல்லை. அதிமுகவும் அதே நிலையில் தான் உள்ளது. மூன்றாவது தலைமுறை தலைவராக விஜயகாந்த், வரும் 20 ஆண்டுகளுக்கு தமிழக வரலாற்றை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குவார். எனவே தேமுதிகவினருக்கு கடûமையும், பொறுப்பும் உள்ளது. தமிழகத்தின் பிரச்னைகளை தீர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். கவர்ச்சி திட்டங்கள் முன்னேற்றத்தை கொடுக்ககாது. வளர்ச்சித் திட்டங்கள் போட்டால் தான் தமிழகம் முன்னேறும். தமிழகத்தில் வறுமை குறையவில்லை.
நாட்டிலேயே அஸ்ஸôம் மாநிலத்திற்கு அடுத்ததாக ஏழைகள் அதிகளவில் தமிழகத்தில் உள்ளனர். ஒரு காலத்தில் கேளரத்தில் உள்ளவர்கள் தான் கூலி வேலைக்கு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் போனார்கள். இப்போது, தமிழகத்திலிருந்து பல இளைஞர்கள் பிற மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் போவதும் தமிழர்கள் தான். தமிழ்நாட்டில், படித்த இளைஞர்களானாலும், படிக்காத இளைஞர்களானாலும் அவர்களுக்கு கைத்தொழில் பயிற்றுவித்து, சொந்தக்காலில் நிற்க வைப்பதன் மூலமாக வறுமையை ஒழிக்க முடியும் என விஜயகாந்த் உறுதிபட தெரிவித்துள்ளார்.
2011 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. தேமுதிவினர் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றார். நலத்திட்ட உதவியாக தையல் இயந்திரங்கள், சேலைகள், சிலவர் குடங்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. கோவை மாநகர் தேமுதிக மாவட்ட செயலர் அர.தமிழ்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.