தேமுதிக இல்லாமல் ஆட்சி இல்லை: நடிகர் விஜயகாந்த்

இலவச திருமண மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
மதுராந்தகம்:
தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
மதுராந்தகம் அருகே மாமண்டூரில் ஸ்ரீஆண்டாள் அழகர் அறக்கட்டளையின் சார்பில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை ஞாயிற்றுக்கிழமை நடிகர் விஜயகாந்த் திறந்து வைத்து, பொதுமக்களுக்காக அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து 6 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமண ஜோடிகளுக்கான சீர் வரிசைப் பொருள்களும், ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி அவர் பேசியது:
ஏழை, எளிய மக்களுக்காக திருமண மண்டபம் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவும், காங்கிரசும் சேர்ந்துக் கொண்டுதான் இலங்கைத் தமிழர்களை அழித்தன. இலங்கைத் தமிழர்களுக்காக முதலில் குரல் கொடுத்தது தேமுதிகதான். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட டாஸ்மாக் கடைகளை திமுக அரசு குறை கூறியது. தற்போதைய திமுக அரசு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு அளித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால், 65 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். தேமுதிக அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் கூட்டணி என்று பலர் கூறி வருகிறார்கள். இதிலிருந்து, தேமுதிக இல்லாமல் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரிகிறது. யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும். திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள். தேமுதிக தலைமையிலான கூட்டணி அமைத்தால், கூட்டணி அமைக்க தயார் என்றார் விஜயகாந்த்.

2 கருத்துகள்:
good Joke
IT'S A DAY DREAM
கருத்துரையிடுக