தி.மு.க., அரசு 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது : அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
புவனகிரி :
கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க., அரசு 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். புவனகிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு இலவச "டிவி' வழங்கிப் பேசியது:
புவனகிரி பேரூராட்சிக்குட்ட கீழ்புவனகிரி மற்றும் ஆதிவராகநத்தம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ஒரு கோடியே 92 லட்சம் தள்ளுபடி செய்யப்பட் டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் எதிர்கட்சிகளுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் எதிர்கட்சி என்று கூட பார்க்காமல் இந்த அரசு மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஆனால் இங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள் அரசு விழாக்களில் பெயர் போடவில்லை என்று குறை கூறுகிறார்கள். அப்படியே பத்திரிகையில் பெயர் போட்டாலும் வர மறுக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக தி.மு.க., அரசு 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக