புதன், 25 ஆகஸ்ட், 2010

அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும்: தா.பாண்டியன் பேட்டி

வேலூர்:


                இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழ்மாநில கட்டிட நிதி, கட்சி வளர்ப்பு நிதியளிப்பு பொதுக்கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் நடைபெற்றது. 
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியது:-


               இலங்கையில் பலலட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்  கொன்றதை எந்த ஊடகமும் படம் பிடித்து வெளிச்சம் போட்டு காட்டவில்லை. 4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டு கொல்லப் பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன. 40ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.  2-வது உலகப் போரை விட இது கொடூரமானது. ஆயுதம் வழங்கப்படும் இந்திய ராணுவ படையின் துணையோடும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


                   இந்தியாவில் 100 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடி பேர் உள்ளனர். இலங்கையில் இரண்டரை கால் கோடி பேர் உள்ளனர். எதற்கும் இலங்கை பயப்படவில்லை. நம்முடை பலவீனத்தை யோசிக்க வேண்டும். வீரத்தை தன் மானத்தை பண்புகளை நாம் இழந்து வருகிறோம். மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. வருங்காலம் அங்கே புதையுண்டு போகிறது. தமிழ்நாட்டை கூறு போட்டு கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. கொலை செய்தாலும் தப்பித்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களின் போலி மதுபாட்டில்கள் அரசு அனுமதி பெற்ற பார்களில் விற்கப்படுகின்றன.


                 நாடும், மக்களும் வளம் பெற வேண்டும். 6 கோடி பேரில் ஒரு கோடி பேருக்கு சொந்த வீடில்லை. குடியிருக்க வீடு வேண்டும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சென்ட் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். தரிசு நில உச்சவரம்பு சட்டத்தில் கீழ் எடுக்கப்பட்ட நிலத்தை இன்னும் கையகப்படுத்த முடிய வில்லை. அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


முன்னதாக அளித்த பேட்டியில் அவர் கூறியது:-
 

                     மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் பணவீக்கம் இல்லை என்ற பொய்யான தகவலை பரப்பி வருகிறது. பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு விலையை தீர்மானித்துதுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதால் அடுத்த மாதம் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலின் போது அமைந்த அ.தி.மு.க.வுடான கூட்டணி நீடிக்கிறது. அதில் மேலும் சில புதிய கட்சிகள் சேர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை மீட்க சக்தி உள்ள வலிமையான கூட்டணியை உருவாக்குவதே எங்கள் கட்சியின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP