ஞாயிறு, 26 டிசம்பர், 2010

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை - கோ.க.மணி




கோ.க.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி கிராமத்தில் 06-03-1952ல் பிறந்தார். 1996, 2001 ஆகிய இருமுறை பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 2006ல் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் மகன் தமிழ்குமரன் மக்கள் தொலைக்காட்சி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.


தொகுதி மேட்டூர்
அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி







Read more...

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை - ஆற்காடு வீராசாமி


   
 
 
சட்டமன்ற  தொகுதி: 
            
             அண்ணா நகர்

சட்டமன்ற பதவி:

 ஆண்டு           கட்சி             
2006                       திமுக
2001
திமுக
1996
திமுக







 
            
               ஆற்காடு என். வீராசாமி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
                    வேலூர் மாவட்டம் குப்பாடிச்சத்தம் கிராமத்தில் 21 ஏப்ரல் 1937ஆம் ஆண்டு பிறந்தார். 1967, மற்றும் 1971ல் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 1989ல் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மூன்றுமுறை 1996, 2001, மற்றும் 2006ல் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1977 - 1983 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்பணியாற்றியுள்ளார். இவர் திமுகவின் பொருளாளராக பணியாற்றி தற்போது திமுகவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

Read more...

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை - க. அன்பழகன்


    
சட்டமன்ற  தொகுதி: 
               துறைமுகம்

சட்டமன்ற பதவி:

 ஆண்டு           கட்சி             
2006                            திமுக            
2001                            திமுக
1996                            திமுக                                  
                 
                  க.அன்பழகன் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொது செயலாளராக உள்ளார்.

    இளமைப் பருவம்

                          அன்பழகனார் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 19-12-1922 அன்று மகவாகப் பிறந்தவர். இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலைபல்கலைக் கழகத்தில் முதுகலைமானித் தமிழ் பட்டப் படிப்பை 1944 முதல் 1946 வரை பயின்றார். பின் சென்னைபச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.

    பொது வாழ்க்கை

                 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1967 பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971 இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். 1984 இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுகவின் முதுபெரும் மேடைப் பேச்சாளரும், தந்தை பெரியாரின் அடியொற்றி நடப்பவரும் ஆவார்.

                தமிழர் இனம் குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார். திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர். கட்சி கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதற்கு இவரின் கண்டிப்பான அணுகுமுறையே என்பது பரவலான கருத்து. அரசியலில் தூய்மையானவர் என்ற நிலையிலும் மாற்றுக் கட்சியினரும் மதிப்பளிக்கும் வகையில் நடப்பவர் என்ற பெரும்பாலானவர் கருத்தும் உண்டு. திமுக வின் தலைவர் மு. கருணாநிதியுடன் அதிக நெருக்கமானவர்.

    எழுத்துப் பணி

                  எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும் எழுதியவர். இவர் எழுதிய பேசும் கலை வளர்ப்போம், (பிரபல வாரப்பத்திரிகையில் பேசும் கலை வளர்ப்போம் என்ற தொடர் கட்டுரையாக வெளி வந்த்து), தமிழர் திருமணமும் இனமானமும் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.
    பிற நூல்கள்;
    • உரிமை வாழுது
    • தமிழ்க்கடல்
    • அலை ஓசை
    • விடுதலைக் கவிஞர்
    • தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
    • இன-மொழி வாழ்வுரிமைப் போர்
    • தமிழினக்காவலர் கலைஞர்
    • நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
    • தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
    • விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
    • பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்

    Read more...

    புதன், 8 டிசம்பர், 2010

    வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி: தேர்தல் நேரத்தில் ராஜதந்திரத்தை கையாளுவேன்; விஜயகாந்த் பேட்டி

    விருத்தாசலம்:  
                 கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை தே.மு.தி.க. தலைவரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் சிதம்பரம் பகுதியில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை விஜயகாந்த் எம்.எல்.ஏ. விருத்தாசலத்திற்கு வந்திருந்தார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார்.
     
    பின்னர் விஜயகாந்த்  கூறியது:-
     
                  மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க தேசிய பேரிடர் என அறிவித்து உடனுக்குடன் நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை வேண்டும். கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக எனது தொகுதியிலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து சட்டசபையில் பேசினால் நடவடிக்கை எடுப்பார்களா? இதனால் தான் என்னால் முடித்த உதவிகளை என் தொகுதிக்கு செய்து வருகிறேன்.
                        
                            சென்னையில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு மின்சாரம் இல்லை. மக்களுக்கு பொது சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
                       ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மத்திய அரசு தீர விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால், இது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என புரியவில்லை. ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கைகள் எடுத்தால் தான் குற்றங்கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
     
    பின்னர் கேட்ட கேள்விக்கு விஜயகாந்த் அளித்த பதில் வருமாறு:-
     
    கேள்வி - வரும் சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறீர்களா?
     
    பதில்- அது ரகசியம்.
     
    கேள்வி- வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியா?
     
    பதில் - வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வராமல் இருக்க அனைத்து ராஜதந்திரங்களையும் தேர்தல் நேரத்தில் கையாளுவேன்
     
    இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

    Read more...

    சனி, 4 டிசம்பர், 2010

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்; திருமாவளவன் பேட்டி

      சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்;
 
 திருமாவளவன் பேட்டி
     
    சிதம்பரம்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில்  அளித்த. அப்போது
    பேட்டி:

    தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய மந்திரி ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது மக்கள் விரோத செயலாகும்.

                   நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவையில் விவாதிக்கலாம் என்று கூறியபோதும் அவையை எதிர்க்கட்சிகள் முடக்கி இருப்பது ஜனநாயக விரோத செயல். மத்திய மந்திரிகள் பிரமோத் மகாஜன், அருண் ஜோரி ஆகியோர் என்ன நடவடிக்கையை பின்பற்றினார்களோ, அதையே ராசாவும் பின்பற்றியதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

                     பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோர் ராசாவை தனிமைப்படுத்தி பழிவாங்க துடிக்கின்றனர். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்களின் போக்கு தலித் விரோத போக்கு.

                        வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணிக்கு எந்த கட்சிகள் வந்தாலும் வரவேற்கிறோம். கூட்டணியில் எந்த கட்சியை சேர்ப்பது என்பது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார். கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

                 விடுதலை சிறுத்தை கட்சியில் 42 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழ் இறையாண்மை மாநாடு சென்னையில் டிசம்பர் 26-ந்தேதி நடைபெறுகிறது. தமிழுக்கு என தனி தாயகம், தமிழ் இனம் தேசிய இனமாக அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

                 பேட்டியின் போது ரவிக்குமார் எம்.எல்.ஏ., கடலூர் நகரசபை துணைத்தலைவர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் திருமாறன், துணைச் செயலாளர் செல்லப்பன், பசுமைவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Read more...

    About This Blog



    இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


      © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

    Back to TOP