விருத்தாசலத்தில் ஜெயலலிதா போட்டியிட கோரிக்கை
கடலூர் :
விருத்தாசலம் தொகுதியில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., போட்டியிட வேண்டும் என்று மாவட்ட ஜெ., பேரவைச் செயலர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்ட ஜெ., பேரவைச் செயலர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதியில் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இத்தொகுதியில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும். மேலும், ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, அன்னதானம், தையல் மிஷன், சலவைப் பொட்டி, தென்னங்கன்றுகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரவிச்சந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக