தமிழக சட்டசபை தேர்தலுக்கு முதல் கட்ட பணி துவக்கம்
விருதுநகர் :
சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட பணியாக, ஓட்டு எண்ணிக்கை மையங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகள், அதற்கான ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், முக்கிய பிரமுகர்களின் சட்டசபை தொகுதிகள் வருகிறதா, பதட்டமான தொகுதிகள் எது, மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா, பாதுகாப்பு, வாகன போக்குவரத்து, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகளில் இரும்பு வலை அமைப்பதற்கு வசதியுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி, அனைத்து கலெக்டர்களுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அறிக்கை பெற்ற பின், ஓட்டு எண்ணிக்கை மையங்கள் குறித்து தேர்தல் கமிஷன் முடிவு செய்யவுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக