திங்கள், 11 அக்டோபர், 2010

கூட்டணியில் புதிய கட்சிகள்: கருணாநிதி கருத்து

சிதம்பரம்:

              புதிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்துவது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது; தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.  

 சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் வல்லம்படுகையில் கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீட்டை பயனாளியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:  

                    தமிழகத்தில் குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களே இத்திட்டத்தை வரவேற்கிறார்கள். தமிழகத்தில் 6 ஆண்டு திட்டமாக மொத்தம் 21 லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்த ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு படிப்படியாக பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.  

அனைவருக்கும் இலவச உயர்கல்வி வழங்கப்படுமா?  

                தமிழகத்தில் தற்போது மருத்துவம், பொறியியல் படிப்பில் பயில குறிப்பிட்ட பிரிவினருக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பிரிவினர்களுக்கு வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு எடுக்கப்படும்.  

வீராணம் ஏரி தூர்வாரப்படுமா?  

                      ஏரி தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்துக்கு யார் பெயர் சூட்டப்படும்?  

                    அதுகுறித்து பிரச்னையாக உள்ளது. பின்னர் முடிவு செய்யப்படும்.  

வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுமா?  

                    அடுத்து ஆட்சிக்கு வந்த பிறகு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார் முதல்வர் மு.கருணாநிதி.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP