ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க.கோட்டை: சுதீஷ்
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலுபேட்டை, முருக்கம்பாடி, தேவரடியார் குப்பம், ஜம்பை, மேலந்தல், மேட்டுச்சேரி, கொங்கராயனூர் உள்ளிட்ட கிராமங்களில் ரிஷிவந்தியம் தொகுதி தே.மு.தி.க வேட்பாளரும், கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் சுதீஷ் கொளுத்தும் வெயிலில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகத்து ஆதரவு திரட்டி பேசினார்.
அப்போது இளைஞரணி மாநில செயலாளர் சுதீஷ் அளித்த பேட்டி
"மாநிலம் முழுவதும் அ.தி.மு.க-தே.மு.தி.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான ஆதரவு அலை வீசுகின்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 219 தொகுதியில் அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ரிஷிவந்தியம் தொகுதியை பொறுத்தவரை தே.மு.தி.க. வுக்கு செல்வாக்கான தொகுதி ஆகும்.
இதனை கடந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் விஜயகாந்த் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றார். தனித்தே நல்ல செல்வாக்கு இருக்கின்ற நிலையில் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க உள்ளதாலும், எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் இந்த பகுதியில் அதிக செல்வாக்கு இருப்பதாலும் தமிழகத்திலேயே மகத்தான வெற்றியை கேப்டன் இந்த தொகுதியில் பெறுவார்.
அவ்வாறு வெற்றி பெற்றபின் இந்த தொகுதி வளர்ச்சி பெற்ற மாதி தொகுதியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை’’என்று கூறினார்.
1 கருத்துகள்:
nallaaa kilipaaru captain
கருத்துரையிடுக