செவ்வாய், 12 ஏப்ரல், 2011

தமிழகத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணிகளில் 234 தொகுதியில் 245 கோடீஸ்வரர்கள்

           தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகளில், 245 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்

            .அ.தி.மு.க., போட்டியிடும், 160 தொகுதிகளில், 88 பேர் கோடீஸ்வரர்கள். தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதிகளில், 14 பேர் கோடீஸ்வரர்கள். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக, தலா, ஒரு கோடீஸ்வரர் களமிறக்கப்பட்டுள்ளார். தி.மு.க., போட்டியிடும், 119 தொகுதிகளில், 81 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் நிறுத்தியுள்ள, 63 வேட்பாளர்களில், 40 பேர் கோடீஸ்வரர்கள். பா.ம.க., நிறுத்தியுள்ள, 30 வேட்பாளர்களில், 12 பேரும், விடுதலைச் சிறுத்தைகளின், 10 வேட்பாளர்களில் இரண்டு பேரும் கோடீஸ்வரர்கள்

             கொ.மு.க., ஏழு இடங்களில் போட்டியிடுகிறது. இதில், ஆறு பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் சார்பில் ஒருவர், 133 கோடி சொத்தும், அ.தி.மு.க., அணியில் ஒருவர், 103 கோடி ரூபாய் சொத்தும், அதிகபட்சமாக கணக்கு காட்டியுள்ளனர். மிகக் குறைந்த தொகையாக விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் செல்லபாண்டியன் 75 ஆயிரம் ரூபாய் ‌சொத்து கணக்கு காட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP