திங்கள், 4 ஏப்ரல், 2011

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 250 கல்லூரி மாணவர்கள்

             திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணியில் 250 கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

             தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வருவாய்த் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

           வாக்குப்பதிவின் போது முறை கேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. தொலைதொடர்பு வசதிகள் உள்ள வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா வைத்து வாக்குப்பதிவை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

               இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து லேப்-டாப் கம்ப்யூட்டர்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
லேப்டாப் கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு கல்லூரி மாணவர்கள் தேர்தலில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 250 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு தேர்தலுக்கு 2 நாள் முன்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP