வியாழன், 16 செப்டம்பர், 2010

34 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும்: அழகிரி

மதுரை:

                  தமிழகத்தில் தொடரும் நலத்திட்டங்களால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் திமுக அணியை வெற்றிபெறச் செய்வார்கள் என, மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார். மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் மக்களை செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். 

பின்னர் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி அளித்த பேட்டி:  

                    கிராமங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்து மனுக்களைப் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளை கேட்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.தேர்தல் நேரத்திலிருந்தே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றி வருகிறேன். தற்போதும் கிராமங்களில் மக்களைச் சந்திந்தபோது ஏராளமான கோரிக்கைகள் வைத்துள்ளனர். பொதுவான பிரச்னை, குடிநீர் வசதி, சாலை வசதி, சமுதாயக் கூடம் அமைப்பது, பஸ் வசதி, பொதுக் குளியலறை, மயானத்துக்கான பாதை ஏற்படுத்தித் தருவது போன்ற கோரிக்கைகள் தனித்தனியாக பிரித்து விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.மதுரையில் டயர் தொழிற்சாலை: மதுரை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் டன்லப் டயர் தொழிற்சாலை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களிடம் நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். 

                      திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசி வருவதாக கேள்வி எழுப்பியுள்ளீர்கள். தமிழகத்தில் ஏழை மக்களுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு நலத்திட்டங்களை செய்துவருகிறது.   இந்த நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். விஜயகாந்த் அதுபோன்று கூறுவதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றிபெறும் என்றார்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP