திங்கள், 13 செப்டம்பர், 2010

தேமுதிகவின் லட்சியத்தை வரவேற்கிறோம்: பா.ஜ.,

 
                     தி.மு.க.,வை வீழ்த்துவது தான் லட்சியம் என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதை பா.ஜ., வரவேற்கிறது என, மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவிலில்  
பா.ஜ மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்  பேசிய
து :

                 தி.மு.க., ஆட்சி நீடித்தால் தமிழர்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் ஆபத்தாக போய் விடும். தி.மு.க.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும், என்று பா.ஜ., வலியுறுத்தி வந்தது. தற்போது தி.மு.க., வை வீழ்த்துவது தான் லட்சியம் என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதை பா.ஜ., வரவேற்கிறது.

                        இலவசம் கொடுத்தும், போதைக்கு அடிமை ஆக்கியும் மக்களை கொள்ளையடித்து வருகின்றனர். வரும் செப்டம்பர் 20 ல் கருணாநிதி குமரி மாவட்டம் வரும்போது, மத்திய அரசின் துணை விளையாட்டு மையம், ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் செயல்படுத்தப்படும், என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த இடத்தை மாற்ற, கலெக்டர் வற்புறுத்தி வருகிறார். அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், கலெக்டர் அறைக்குள்ளேயே பா.ஜ., போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

                       கோவையிலும், திருச்சியிலும் அ.தி.மு.க., விற்கு கூடிய கூட்டத்தை கண்டு, தி.மு.க., சார்பில் போட்டி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் கல்வி உதவித்தொகைக்காக பா.ஜ., சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கூட்டத்தை பார்த்து, தி.மு.க., முப்பெரும் விழா நடத்துகிறது.

                         தி.மு.க., ஆட்சியில் அதிகமாக மிரட்டல்களும், தாக்குதல்களும் நடக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும். ஒரு சப் இன்ஸ்பெக்டரை இரண்டு அமைச்சர்கள் கண்முன் வெட்டி கொலை செய்த சம்பவமும் இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது. காய்ச்சலால் தமிழ்நாடு ஸ்தம்பித்து போய் உள்ளது. தி.மு.க., ஆட்சி வெளியேறினால்தான் பன்றி காய்ச்சலும் வெளியேறும், என்றார்.

1 கருத்துகள்:

Vibunan 13 செப்டம்பர், 2010 அன்று PM 8:38  

தே மு தி க வை விடுவோம். பா ஜ க மிக ஆபத்தான கட்சி. அது வளர்வது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் மிக தீமையாகவே முடியும். அதோடு கூட்டு வைப்பது தமிழ்நாட்டிற்கு வேட்டு வைப்பது.

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP