மீண்டும் முதல்வராவார் கருணாநிதி: ஸ்டாலின்
மீண்டும் தமிழக முதல்வராவார் கருணாநிதி என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஊட்டி மோனார்க் ஹோட்டலில் இளம் பேச்சார்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அமைச்சர்கள் துரைமுருகன், பொங்களூர் பழனிச்சாமி, பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நடிகை குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமை தொடங்கி வைத்துப் பேசிய மு.க.ஸ்டாலின், இந்த பயிற்சி முகாம் திமுகவின் கொள்கைகளை எப்படி மக்களிடத்தில் கொண்டுபோய் மிக எளிதாக சேர்க்க வேண்டும் எனபதே இந்த முகாமின் குறிக்கோள். பெரியாரும் அண்ணாவும் வளர்த்தெடுத்த இந்தக் கழகத்தை எல்லோரும் இணைந்து மென்மேலும் வளர்க்க வேண்டும். திமுகவின் வரலாறுகளையும், கழகத்தினுடைய தியாகங்களையும் மக்களிடத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
சிவகங்கையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற இளைஞன் திமுகவின் வரலாறுகளை படித்துக்கொண்டு கட்சிக்கு அயராறு உழைத்து இறந்துபோனான். அப்படிப்பட்ட உண்மையான தொண்டர்களை பெற்றிருக்கக் கூடியதுதான் திமுக. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதுவரை தமிழக முதல்வராக கருணாநிதி 5 முறை பதவி வகித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னர் அவர் மீண்டும் தமிழக முதல்வராவார் என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக