அதிமுக கூட்டியதை விட அதிக கூட்டத்தை கூட்டவேண்டும்:நேரு
திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமயில் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.
’’வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் கருணாநிதி திருச்சியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டும், அண்ணன் அன்பில் சிலையை திறந்து வைத்தும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கலைஞர் அறிவாலயம் அருகில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் அன்பில் சிலையை தலைவர் திறந்து வைக்கிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் மன்னார்புரம் ராணுவ மைதான திடலுக்கு தலைவர் சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடுவார்.அவர் வரும் வழி எல்லாம் மனித தலைகளாக காட்சி அளிக்கவேண்டும்.
’’வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் கருணாநிதி திருச்சியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டும், அண்ணன் அன்பில் சிலையை திறந்து வைத்தும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கலைஞர் அறிவாலயம் அருகில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் அன்பில் சிலையை தலைவர் திறந்து வைக்கிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் மன்னார்புரம் ராணுவ மைதான திடலுக்கு தலைவர் சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடுவார்.அவர் வரும் வழி எல்லாம் மனித தலைகளாக காட்சி அளிக்கவேண்டும்.
திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை 60 வார்டுகளில் இருந்தும் வார்டுக்கு 1000 பேரை அழைத்து வரவேண்டும். புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்காக 1000 பஸ், 1000 வேன்கள் தயாராக இருக்கும். அதன் மூலம் அவர்களையும் அழைத்து வரவேண்டும். திருச்சியில் ஜெயலலிதா பேசிய கூட்டத்தில் தான் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக அ.தி.மு,.கவினர் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். நமது பலம் என்ன என்பதை நிரூபித்துக்காட்டவேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.
1 கருத்துகள்:
கோழி பிரியாணியும்,டாஸ்மாக்கில குவாட்டரும் ஒழுங்குபடுத்துங்க!கூட்டம் பிச்சுக்கிட்டு வரும்!!!!!
கருத்துரையிடுக