புதன், 16 மார்ச், 2011

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி பார்வை

தொகுதி பெயர் : 

தாம்பரம் 

வரிசை எண் :

31

அறிமுகம் :

              காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் மிகப்பெரிய தொகுதியாக 8 லட்சம் வாக்காளர்களைக் கொண்டு திகழ்ந்தது தாம்பரம் தொகுதி. மறு சீரமைப்புக்குப் பின் இந்தத் தொகுதியிலிருந்து புதிதாக பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய இரு தொகுதிகள் உருவாக்கப்பட்டதால் அதன் பழம்பெருமையை இழந்துள்ளது. 1977-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் இதுவரை 8 முறை தேர்தல் நடந்துள்ளன. இதில் 5 முறை திமுகவும், 2 முறை அதிமுகவும், ஒரு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.   

எல்லை :

            தெற்கில் பெருங்களத்தூர் பேரூராட்சியும், கிழக்கில் செம்பாக்கம் பேரூராட்சியும், வடக்கில் சிட்லப்பாக்கமும், மேற்கில் முடிச்சூரும், தாம்பரம் தொகுதியின் எல்லைகளாகும். தாம்பரம் தொகுதியில் தாம்பரம் நகராட்சி, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர் ஆகிய 5 பேரூராட்சிகளும், முடிச்சூர், அகரம்தென், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், மதுரப்பாக்கம், திருவஞ்சேரி ஆகிய 6 கிராம ஊராட்சிகளும் உள்ளன.    

 இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள். 

 1977 முனு ஆதி (அதிமுக) 
 1980 பம்மல் நல்லதம்பி (திமுக) 
 1984 இல.ராஜமாணிக்கம் (அதிமுக)
 1989 எம்.ஏ.வைத்தியலிங்கம் (திமுக) 
 1991 எஸ்.எம்.கிருஷ்ணன் (காங்கிரஸ்)  
 1996 எம்.ஏ.வைத்தியலிங்கம் (திமுக) 
 2001 எம்.ஏ.வைத்தியலிங்கம் (திமுக)
  2006 எஸ்.ஆர்.ராஜா (திமுக)    

வாக்காளர்கள்  

ஆண்:           1,20,689  
பெண்:          1,17,606
மொத்தம்:    2,38,295 

வாக்குச்சாவடிகள்  மொத்தம் : 

253 

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்: 

 கோட்டாட்சியர் கே.செüரிராஜன் 90940 14667.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP