புதன், 16 மார்ச், 2011

விரல்கள் இல்லாத வாக்காளர்களுக்கு மை இடுவது எப்படி?

           விரல்கள் இல்லாத வாக்காளர்கள் ஓட்டுப் போட்டதை உறுதி செய்யும் மையை இடுவது எப்படி என்று தேர்தல் ஆணையம்  அறிவுறுத்தியுள்ளது.

             தேர்தலில் வாக்காளர்கள் வாக்குகளை முறையாக அளிக்க தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. கள்ள ஓட்டைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி தங்கள் ஓட்டை எவரேனும் முன்னதாகவே கள்ள ஓட்டாக பதிவு செய்திருந்தால் அதை வாக்குச்சாவடி அலுவலரிடம் முறையிட்டு விண்ணப்பித்து தங்கள் வாக்கையும் பதிவு செய்யலாம்.

           மேலும் ஒருவரே பல ஓட்டுக்களை பதிவு செய்யும் போக்கை தடுக்க இடது கை சுட்டுவிரலில் நகம் சதைப் பகுதியில் சில்வர் நைட்ரேட் எனும் அழியாத மை வைக்கப்படுகிறது. இதில் சிலருக்கு இடது கை சுட்டு விரல் இல்லாமல் இருந்தால் அடுத்த நடுவிரலுக்கு இட வேண்டும். அந்த விரலும் இல்லாவிட்டால் மற்ற விரல்களில் இட்டுக் கொள்ளலாம். இடது கையில் எந்த விரலுமே இல்லாத வாக்காளர் என்றால் வலது கை சுட்டுவிரலில் இடலாம். அந்த விரலும் இல்லாவிட்டால் அடுத்தடுத்த விரல்களில் இந்த மையை இட்டுக் கொள்ளலாம்.

             இரண்டு கைகளிலுமே ஏதேனும் விபத்து மூலம் விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்தால் இடது கை மணிக்கட்டில் இதற்கான மையை இட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP