செவ்வாய், 15 மார்ச், 2011

தமிழக சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 11 தொகுதிகளில் போட்டி

கும்பகோணம்:
 
             மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தமிழகத்தில் 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்றார் அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் பாலசுந்தரம். 
            
             திருவிடைமருதூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சொ. இளங்கோவன் போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.   சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். 

              கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு மிக மோசமான பாதிப்பும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.  திமுக, அதிமுக என இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்தபோதும் விவசாயிகள் தற்கொலை, வேலை பாதிப்பு, கடன் தொல்லை, பட்டினிச் சாவு நடந்திருக்கிறது.  தமிழ்நாட்டில் மாற்று அரசியல் தேவை. உழைப்பாளர்களாக உள்ளவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். தேர்தல் கூட்டணி பேரம் பேசும் வகையில் உள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோர் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காகத்தான் பேரம் என்று கூறப்படுகிறது என்றார் அவர்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP