ஞாயிறு, 13 மார்ச், 2011

தமிழக சட்டமன்ற தேர்தல் : பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள்

                 பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் ஈரோ ட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

கூட்டத்திற்கு பிறகு கட்சியின் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கூறியது 


                தமிழக சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. முதற்கட்டமாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் 131 வேட்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் பேச்சுவார்த்தை முடிந்ததும் இரண்டாம் கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து விடுவோம்.

                கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜக.,வுக்கு 2.3 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இம்முறை 7 சதவீதமாக வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம்.  இத்தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக., வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. 80 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக விளங்குகிறது. கடந்த தேர்தலின் போது பாஜகவினால் 23 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. எங்களை பொறுத்தவரை வாக்குவங்கியை பலப்படுத்தவே தனித்து போட்டியிடுகிறோம்.
 
               தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைவர்கள் அத்வானி, நிதின்கட்கரி, சுஸ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, நரேந்திரமோடி, எடியூரப்பா, சிவராஜ்சவுகான், ஹேமாமாலினி, குட்டிபத்மினி போன்றவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். வரும் 16ம் தேதி சென்னையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் பிரசாரம் துவக்கப்படும்’’ என்று  தெரிவித்தார்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP