வெள்ளி, 18 மார்ச், 2011

சட்டசபை தேர்தலை முதன் முறையாக சந்திக்கும் அதிமுக வேட்பாளர்கள்

            தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிவித்தார்.

           நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டசபை தொகுதியில் புத்தி சந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்குந்தா ஒன்றிய செயலாளராக பணியாற்றி வரும் இவர் தற்போது தமிழக சட்டசபை தேர்தலில் முதன் முறையாக போட்டியிடுகிறார். படுகர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

                  தாராபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பொன்னுசாமியும் முதல் முறையாக களம் காணு கிறார். பொள்ளாச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்துகருப்பண்ணசாமியும் சட்டசபை தேர்தலுக்கு புதியவர். தற்போது கிணத்துக்கடவு ஒன்றி செயலாளராக உள்ளார்.  

                 பல்லடம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரமசிவம், கவுண்டம்பாளையம் வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி, திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் விசாலாட்சி, திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் ஆனந்தன், அவினாசி வேட்பாளர் கருப்பசாமி ஆகியோரும் சட்டசபை தேர்தலுக்கு புதுமுகங்கள் ஆவார்கள்.

               திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விசாலாட்சி 2001 சட்டசபை தேர்தலில் திருப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் மாற்றப்பட்டார்.  

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP