2011 தமிழக சட்டமன்றத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13 ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மணி வரை மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். 20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அன்று மட்டும் மனுக்கள் பெறப்படாது.
மனு தாக்கல் செய்ய 26ந் தேதி கடைசி நாளாகும். 28ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 30ந் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 13ந் தேதி ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட உள்ளது. மே 13ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக