ஞாயிறு, 13 மார்ச், 2011

சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிட 122 பேர் விருப்ப மனு


                    தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், போட்டியிடவுள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த 1-ந்தேதி முதல் 6-ந்தேதிவரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 10 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகம் முழுவதிலுமிருந்து 1025 மனுக்கள் விண்ணப் பிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் கடந்த 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெற்றன. விருப்ப மனுக்களின் விண்ணப்பக் கட்டணம் மூலம் ரூ.52 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

        திருமாவளவன் தேர்தலில் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்து 122 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு 235 பேர் விண்ணப்பித்துள்ளனர். 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகின்றது. தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

                        

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP