காஞ்சிபுரம் மாவட்டத்தில்ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமிடம் அறிவிப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுகள், 7 மையங்களில் எண்ணப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்
சோழிங்கநல்லூர்,
ஆலந்தூர்,
பல்லாவரம்,
ஸ்ரீபெரும்புதூர் (தனி),
தாம்பரம்,
செங்கல்பட்டு,
திருப்போரூர்,
செய்யூர்(தனி),
மதுராந்தகம்(தனி),
உத்திரமேரூர்,
காஞ்சிபுரம்
என 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரும் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் ஓட்டுகள் மே 13ம் தேதி, எண்ணப்பட உள்ளன.
சோழிங்கநல்லூர் தொகுதி ஓட்டுகள் மேடவாக்கம் சாலையில் உள்ள முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரியிலும், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் தொகுதி ஓட்டுகள் புனித தோமையார் மலைப் பகுதியில் உள்ள மான்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி ஓட்டுகள் தண்டலம் கிராமத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளன. தாம்பரம் தொகுதி ஓட்டுகள் சென்னை கிறிஸ்தவ கல்லூரி, செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதி ஓட்டுகள் வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரி, செய்யூர் மற்றும் மதுராந்தகம் தொகுதி ஓட்டுகள் மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி ஓட்டுகள் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள பல்லவன் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் எண்ணப்பட உள்ளன.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு சீலிடப்பட்ட அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்படும். 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதி ஓட்டுகள் எண்ணப்பட உள்ள பல்லவன் பொறியியல் கல்லூரியை நேற்று, தேர்தல் பார்வையாளர்கள் அலோக்குப்தா, கிருஷன்குமார், காவல் பார்வையாளர் அலோக்ரஞ்சன், கலெக்டர் அஷிஷ்சட்டர்ஜி, எஸ்.பி., பிரேம்ஆனந்த் சின்கா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக