தமிழகத்தில் ஏப்ரல் 13ந் தேதி பொதுவிடுமுறை: பிரவீண்குமார்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2011 க்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 13ந் தேதி நடைபெறுகிறது. செலாவணி முறிச்சட்டம் 1881 ன் பிரிவு 25ன் கீழ் அன்றைய தினம் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலை அல்லது வணிக பணியமைப்பில் பணியாற்றுவோருக்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் பிரிவு 135 பி ன்படி, ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 13 அன்று ஊதியத்துடன்கூடிய விடுப்பு அளிக்கும்படி நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறையால் அறிவுறுத்தப்படுவார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக