வியாழன், 10 மார்ச், 2011

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியல் தயார்: பொன்.ராதா கிருஷ்ணன்

            தமிழக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் சென்னையில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

இது பற்றி கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்,

          "பாரதீய ஜனதா கட்சி சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டினர். அவர்களில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த பட்டியல் கட்சியின் மேலிட தலைவர்களுக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் பட்டியலை பரிசீலித்து வேட்பாளர்கள் பெயர்களை அறிவிப்பார்கள்.   குமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமானோர் போட்டியிட அனுமதி கேட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

             நாகர்கோவில் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தகவல் மேலிட தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அவர்கள் இது பற்றி முடிவு செய்வார்கள்’’ என்று கூறினார்.  


About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP