திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள்
திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. குழுவினருக்கும் கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில், முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 7 தொகுதிகளிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
1 கருத்துகள்:
தி.மு.க உடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு எங்கள் தலைவர்கள் பதில் என்ன?
கள்ளு இறக்க அனுமதி தரவில்லை .
அவினாசி அத்திகடவு திட்டம் போன இடம் தெரியவில்லை
”சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் ”
மு.க வின் சொல்லுக்கெற்ப ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையில் உள்ளது.
திருப்பூர் சாய கழிவுக்கு ஓரு தீர்வும் காணப்படவில்லை
அதுவரை ..
இனி தேர்தல் வேலை செய்ய போவது இல்லை,
கருத்துரையிடுக