வியாழன், 3 மார்ச், 2011

தமிழக சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் மக்கள் கட்சி 100 தொகுதிகளில் போட்டி

மன்னார்குடி:

                   முத்தரையர் மக்கள் கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடுவது என்று மன்னார்குடியில் நடந்த முத்தரையர் மக்கள் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

               மன்னார்குடியில் முத்தரையர் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் தலைவர் தங்க குமரேசன் தலைமையில் நடைபெற் றது. சந்திரகாசன் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் வடிவழகன், இளை ஞரணி செயலாளர் ரமேஷ், தர்மராஜ், சரவணன், முருகானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
                   முத்தரையர் மக்கள் கட்சி சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், இதை யொட்டி தமிழகம் முழுவதும் வரும் 6ம் தேதி கடசி கொடியேற்றி பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும், வாக்கு எண்ணிக்கையில் அதிகம் பெற்ற கட்சியை ஆளும் கட்சியாக அறிவிக் கும் சட்ட திருத்தத்தை கொண்டுவரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP